01.10.2009 தொடக்கம் 05.10.2009 வரை திருகோனமலையில் கம்போறி 2009 நடைபெற்றது. அதில் வடக்க கிழக்கு மாகாகங்களில் இருந்து 590 சாரணர்கள் கலந்து கொன்டனர். இந்த கம்போறியினை 7வது திருமலையின் முன்னாள் சாரணத்தலைவரும் இன்னாள் உதவி மாவட்ட ஆணையாளருமான பூ.உதயகுமார் பொறுப்பேற்று நடாத்தினார். இக் கம்போறியில் நடந்த போட்டிகளில் 7வது சாரணர் குழு பல பரிசில்களை பெற்றுக்கொன்டது.அவை வருமாறு நிலைக்காட்சி, தனிநபர் சிறப்பு வெளிப்பாடு, சிறந்த சாரணர், சாரணத்தலைவருக்கான கையேட்டுக்கான விருது, சிறந்த சமூக சேவையாளர் விருது 2009, வேலைவாரம் 2009 கூடிய தொகை சேர்புக்கான விருது (83000/=), திருகோனமலை சிறந்த துருப்பு 2009 விருது, கம்போறியில் சிறந்த துருப்பு ஆகிய விருதுகளை பெற்றுக்கொன்டு கம்போறியில் முதலாமிடத்தை பெற்றுக்கொன்டது.
இந்நேரத்தில் எமது இவ்வெற்றிக்கு தோழோடு தோழ் சேர்த்த எமது பழைய சாரணர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சாரணத்தலைவர்
சி. விவேகானந்தன்.
test
ReplyDelete